மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு துவக்க விழா! நம்மவர் தலைமையில்!

17 February 2024

                `

அனைவருக்கும்‌ வணக்கம்,

‘மக்கள் நலன் ஒன்றே தனது கொள்கை,
அதுவே நாளைய உலகின் நவீன சித்தாந்தம்'

என்று முழங்கி நம்மவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நாள் பிப்ரவரி 21.

வரும் பிப்ரவரி 21 (21-2-2024) நமது மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று நம்மவர் காலை 10 மணியளவில், நமது தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.

அந்த சீர்மிகு நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள்; அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள்; நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தாய்மொழி தினத்தில் (பிப்ரவரி 21) பிறந்த மக்கள் நீதி மய்யம் 
நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்லும்!
வரலாறு அதைச் சொல்லும் !!

வாருங்கள்! ஒன்று கூடுவோம்.. வென்று‌ காட்டுவோம்..
#நாடாளுமன்றத்தில்_நம்மவர்

நன்றி! நாளை நமதே!!

ஆ. அருணாச்சலம் M.A., B.L.,
பொதுச்செயலாளர் - மக்கள் நீதி மய்யம்.


Download PDF

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1759137799100600375?t=Y0cPZMFwZBCPyzuc0Hy1eQ&s=19

Facebook: https://www.facebook.com/share/6WD8G7Q5NDAn9XZe/?mibextid=xfxF2i

Instagram: https://www.instagram.com/p/C3e0ZWfPoqG/?igsh=MWU5bzhkYjc0Z2tzOA==

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.