About Leader


Nammavar

நம் தலைவர்

 'நம்மவர் ' என அன்புடன் அழைக்கப்படும் திரு. கமல்ஹாசன் அவர்கள், இந்திய சினிமாவின் இணையற்ற உருவகமாக ஆளுமை செய்து வருகிறார்.

தன்னை சினிமா என்ற வட்டத்திற்குள் மட்டுமே பொருத்திக் கொள்ளாமல் , சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் தன் கண்ணில் படும் அநீதிகளைத் தட்டிக் கேட்கத் தயங்கியதில்லை அவர்.

காவிய இலக்கியப் பரப்பில் பெருமை கொண்டவர் திரு. கமல்ஹாசன். முந்தையத் தலைமுறையின் உணர்வுகளையும் , உண்மைகளையும் பரிமளிக்கும் இவரது படைப்புகள் , எப்போதுமே காலத்திற்கு அப்பால் , காலத்தை முந்தியே இருக்கும். அவரின் சமகாலக் குறிப்புகள் ,எப்போதும் எதிர்கால வெளிப்பாடுகளின் சாயலைக் கொண்டே இருக்கும். இந்தத் தனித்தன்மையே அவரைப் பரிமளிக்க செய்தது. ஒரு உண்மையானத் தலைவன் , உதாரணமாக வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமே இவர் தான்.

எண்ணற்ற ரசிகர்களின் அன்பில் அவர் திளைக்கவில்லை. ரசிகர் மன்றங்களின் ஆரவாரத்தில் அவர் அமிழ்ந்து போனதில்லை. மாறாக, தன் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி, இந்த சமுதாயத்திற்குப் பயனளிக்கும் செயல்களில் தன் ரசிகர்களை ஈடுபட செய்தார். சற்றே திரும்பிப் பார்த்தால், அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதோ ஒரு சமூக செய்தியை சொல்லியிருக்கிறார் என்பது நமக்கே புரியும்..தனது சமூகக் கடமையாற்ற அவர் என்றைக்குமே தயங்கியதில்லை. ஏதோ ஒரு வகையில் , அமைதியாக , சினிமாவின் மூலம் 'தன் ' அரசியலை அவர் முன்வைத்துக் கொண்டே தான் இருந்திருந்தார்.

70 ஆண்டுகள் கழிந்தும் தமிழ்நாட்டின் அரசியல் , அரசியல்வாதிகளின் ஒழுங்கின்மையால் , சீர்குலைந்து போயிருக்கிறது . தற்போதுத் தேவையான மாறுதலைக் கொண்டு வர சரியான நேரம் என்பதை உணர்ந்தவர் திரு.கமல்ஹாசன். அதை மனதில் வைத்தே 2018 ம் ஆண்டு February 21 அன்று , மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியைத் தொடங்கினார் .மக்களின் தேவைகளைப் பின் தொடர்வதே ஒரு தலைவனின் கடமை என நினைப்பவர் இவர்.

அரசியல்வாதிகளின் மெத்தனப்போக்கும் அலட்சியமுமே மக்களை புறந்தள்ளிய அரசியலாக இன்று ஆக்கியிருக்கிறது. 

தனது 64 வருட சினிமா வாழ்க்கையின் போது கொண்டிருந்த சமூகக் கடமை , இன்று அரசியலில் பன்மடங்கு பரிமளிக்கிறது. மக்களை சிந்திக்க விடாமல் செய்யும் இன்றைய அரசியலில் , மக்களைப் பங்குபெற செய்யும் அரசியலை முன்வைத்தார் திரு. கமல்ஹாசன். 

பகட்டான வார்த்தைகளையும் , படாடோபமான வாக்குறுதிகளையும் வாரித் தெளித்து மக்களை ஏமாற்றாமல்., மக்களுக்கு எது சரியோ அதை முன்வைக்கும் அரசியலை முன்வைத்த மாற்றம் திரு.கமல்ஹாசன்.

எதற்காகவும் தன் கொள்கைகளிலிருந்து விலகாத திரு.கமல்ஹாசன், மக்களுக்கு எது சரியோ அதை செய்யும் அரசியலை முன் வைத்துள்ளார். சமூகத்தின் பல தளங்களிலுள்ள இடர்பாடுகளைக் களைவதில் முழுமூச்சுடன் செயல்பட்டு வரும் திரு.கமல்ஹாசன் , தன் மய்யத்திலிருந்து விலகாமல் , நேர்மையாக , அரசியல் களத்தில் பரிமளிக்கிறார்.

திரு. கமல்ஹாசனின் நேர்மை, தமிழ்நாட்டை , அபரிமிதமான வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்லக் காத்துக் கொண்டிருக்கிறது.