மாநில தலைமையகத்தில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்க பேரவையின் கொடியேற்று விழா!

1 மே, 2023

                `

மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பில் நூற்றாண்டு மே தினத்தை முன்னிட்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணைத் தலைவர் திரு.R.தங்கவேலு அவர்களின் தலைமையில், துணைத் தலைவர் திரு.A.G.மெளரியா.,IPS (Rtd), நம்மவர் தொழிற்சங்க பேரவை தலைவர் திரு.சு.ஆ.பொன்னுசாமி ஆகியோரது முன்னிலையில் தொழிற்சங்க பேரவை கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

அப்போது தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய துணைத் தலைவர் திரு.A.G.மெளரியா.,IPS (Rtd) அவர்கள் உழைப்பாளர்களின் உரிமை தினமான மே தினம் உருவாக எண்ணற்ற தொழிலாளர்கள் உயிர் நீத்ததையும், ஆசியாவிலேயே முதன் முதலாக சென்னையில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலனார் அவர்கள் மே தினத்தை கொண்டாடியதையும் நினைவு கூர்ந்து, 12 மணி நேரம் வேலை மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற்றதற்கு மக்கள் நீதி மய்யம் சார்பிலும், தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சார்பிலும் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.G.நாகராஜன், 
மாநில செயலாளர் திரு. முரளி அப்பாஸ், துணைச் செயலாளர்கள் 
திரு. பிரகாஷ், கபிலரசன், நம்மவர் தொழிற்சங்க பேரவை பொருளாளர் திருமதி.மா.பானுமதி, துணைத் தலைவர்கள் திரு.கே.மாடசாமி, திரு.கோ.ரவிச்சந்திரன், துணைச் செயலாளர் திரு.எஸ்.சுரேஷ், கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு. மாறன், தொழிலாளர் நல அணி மண்டல அமைப்பாளர் திரு.டி.சேகர், மாவட்ட அமைப்பாளர் 
திரு. ராம்சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

- ஊடகப் பிரிவு
மக்கள் நீதி மய்யம்.


Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1652957587900624898?t=HeaP5rWGjM5SsWJkmQuyHQ&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02Y8vz5xARnWJ3NH5TdJtJqojTttoy8zmH9rt416CHEdaKxwXxDxmtVRJHg8Jr1CfBl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CrscK4lvYfo/?igshid=YmMyMTA2M2Y= 

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.