ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திரு. கமல்ஹாசன் அவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்

23 ஜனவரி, 2023

                `

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில், திரு. கமல்ஹாசன்அவர்கள், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பார் என்ற எதிர்பார்ப்போடு , ஜனவரி 23, 2023 அன்று , திரு . இளங்கோவன் அவர்களும் , காங்கிரசின் முக்கிய நிர்வாகிகளும் , மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் திரு . கமல்ஹாசன் அவர்களை சந்தித்து ஆதரவு கோரினர் .

இதனைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தத் தலைவர் திரு . கமல்ஹாசன் , ஜனவரி 25,2023 அன்று , தாம் காங்கிரசுக்கு ' நிபந்தனையற்ற ஆதரவு ' அளிப்பதாகத் தெரிவித்தார்.

பிரிவினைவாத சக்திகளைத் தமிழ்நாட்டிற்குள் எக்காரணம் கொண்டும் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணமே , இந்த இடைத் தேர்தலில் காங்கிரசை ஆதரிக்கக் காரணம் என்று திரு . கமல்ஹாசன் அவர்கள் குறிப்பிட்டார்.




சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.