தலைவர் திரு.கமல்ஹாசன் பாரத் ஜோடோ யாத்ராவில் திரு.ராகுல் காந்தியுடன் நடைபயணம்

24 டிசம்பர், 2022

                `

மெல்ல மெல்ல நாம் இழந்து கொண்டிருக்கும் இந்திய அரசியலமைப்பின் மாண்புகளை மீட்டெடுக்க , காங்கிரஸ் MP திரு . ராகுல் காந்தி அவர்கள் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரையில், தன்னுடன் பங்குபெறக் கோரி , மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு . கமல்ஹாசன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார் .
அழைப்பினை ஏற்ற திரு . கமல்ஹாசன் அவர்கள், டிசம்பர் 24,. 2023 அன்று , டெல்லியில் ராகுல் காந்தி அவர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார் . தொடர்ந்து , செங்கோட்டையில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார் .

பாரத் ஜோடோ யாத்திரையின் மூலம் திரு . கமல்ஹாசன் அவர்கள் , இந்திய அரசியலமைப்பின் மாண்புகளைக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கும் பிரிவினைவாத சக்திகளை ஒடுக்க , தான் தெருக்களில் இறங்கிப் போராடத் தயாராக இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டினார் .
ஒரு இந்தியக் குடிமகனாக , வேற்றுமையில் ஒற்றுமை எனும் நம் உயரிய மாண்பைக் காக்கத் தயங்க மாட்டேன் என்ற செய்தியை இந்த பாரத் ஜோடோ யாத்திரையின் மூலம் திரு. கமல்ஹாசன் அவர்கள் தன் நிலைபாட்டைத் தெளிவாகக் குறிப்பிட்டார்.


The 'call' to take a few steps towards a UNITED INDIA,came from Congress MP Mr. Rahul Gandhi. MNM President Mr. Kamalhaasan, immediately accepted the invitation and joined Mr. Rahul Gandhi in his mission to unite the nation, The Bharat Jodo Yatra, on December 24, 2022 at New Delhi . 

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.