இந்திய விமானப் படை தாக்குதல் பிரிவின் முதல் பெண் தளபதி விண்ணைத் தாண்டி பெருமை சேர்ப்பீர்! ஷாலிஸா தாமிக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

8 மார்ச், 2023

                `

மகளிரணி மாநில செயலாளர் திருமதி. மூகாம்பிகா இரத்தினம் அறிக்கை.

இந்திய விமானப் படையின் தாக்குதல் பிரிவுக்கு முதல் பெண் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஷாலிஸா தாமிக்கு மக்கள் நீதி மய்யம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மகளிர்க்கும், தேசத்துக்கும் விண்ணைத் தாண்டியும் பெருமை சேர்ப்பார் என இவ்வீராங்கனையைப் பாராட்டுகிறோம்.

ஏற்கெனவே பல்வேறு விருதுகளைக் குவித்துள்ள ஷாலிஸா தாமி, முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு விமானப் படைப் பிரிவுக்கு தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியது. விண்ணிலும் எதிரிகளைப் பந்தாடும் படைக்கு கட்டளையிடும் அதிகாரம் முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு கிடைத்துள்ளது கூடுதல் சிறப்பு.

ராணுவம், துணை ராணுவம், காவல் துறைகள் மட்டுமின்றி, அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். உயர் பதவிகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்று சர்வதேச மகளிர் தினத்தில் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

- மூகாம்பிகா இரத்தினம்
மாநில செயலாளர் - மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி,
மக்கள் நீதி மய்யம்.





சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.