அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க சட்டத்தைக் கொண்டுவந்த, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

25 December 2025

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) காந்தியடிகளின் பெயரை நீக்கி சட்டமியற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், நேற்று மதுரை மண்டலத்திற்குட்பட்ட , ம நீ ம மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு, தேனி, மற்றும் பரமக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மதுரை மண்டலச் செயலாளர் திரு. அழகர் தலைமையில், மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி பத்மா ரவிச்சந்திரன், (நெல்லை - மதுரை மண்டலங்கள் ) மகளிர் அணி மண்டல அமைப்பாளர் திருமதி கலையரசி, மாவட்டச் செயலாளர்கள் திரு. ஏ. நம்மவர் செந்தில், திரு. கா. கதிரேசன், திரு. கார்த்திகேயன், திரு.ஜோதி ஐயப்பன், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. பிரகாஷ் அவர்கள்,
மாவட்ட அமைப்பாளர்கள் திரு. எம். பாண்டியன், திரு ஜஸ்வந்த் பாபு. திருமதி தனலட்சுமி, திரு. கார்த்திக், ஒன்றிய அமைப்பாளர் திரு. பால்காசன், மாவட்டப் பொருளாளர் திரு. ஜெய கண்ணன் ஆகியோருடன் மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று, ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்...

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2004134639892603150

Facebook: https://www.facebook.com/share/p/1DXdS9pA7x/

Instagram: https://www.instagram.com/p/DSrswAOCUOK/?utm_source=ig_web_copy_link

Recent video







Share this post