தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தென்மாநிலங்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், கருப்புக் கொடி ஏற்றுவோம்; ஏந்துவோம்!

15 ஏப்ரல், 2026

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 
தென்மாநிலங்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும்,

கருப்புக் கொடி ஏற்றுவோம்; ஏந்துவோம்!

மக்கள் நீதி மய்யம் அழைப்பு!

பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசு கொண்டுவர இருக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவானது வட இந்திய மாநிலங்களுக்கு வலுச்சேர்ப்பதாகவும், தென்னிந்திய மாநிலங்களை வஞ்சிப்பதாகவும் உள்ளது.

அவசரகதியில் கொண்டுவரப்படும் இந்த மசோதாவானது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் குரலை பாராளுமன்றத்தில் குறைப்பதற்கான குறுக்குவழியாகும்.

இந்த அநீதிக்கு எதிரான குரலாக, எழுச்சிக் குரலாக மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கவேண்டும் என்று நமது தலைவர் திரு. கமல் ஹாசன் M.P., அவர்கள் நம் நிர்வாகிகளுக்கு, உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆகவே, தொகுதி மறுவரையறை மூலம் தென்மாநிலங்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் நாளை(16-04-2026, வியாழன் அன்று) தங்கள் தொகுதிகளில் கருப்புக்கொடி ஏந்துமாறும், கட்சி அலுவலகங்களில் கருப்புக்கொடி ஏற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செந்தில் ஆறுமுகம்,
தலைமை நிலையச் செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
#Delimitation

Social Media Link

X: https://x.com/i/status/2044482997089644875

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02rGo6ZLRApiHz91QSpbticVr2HG92m9z3KboE3oh
pWeCfX5SrQUfSYVujXVWtutLwl&id=100064900236042&mibextid=CDWPTG

Instagram: https://www.instagram.com/p/DXKZSCqiK_t/?igsh=ZTg2OWRtZWk3eXZm

சமீபத்திய காணொளி







Share this post