மக்கள் நீதி மய்யம் மற்றும் காவேரி மருத்துவமனை சார்பாக சோழிங்கநல்லூர் பகுதியில் தொடர் மருத்துவ முகாம்.

18 December 2023

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை காலத்திற்குப் பின்பு ஏற்படும் நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க மக்கள் நீதி மய்யம் மற்றும் காவேரி மருத்துவமனை சார்பாக தொடர் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. மக்கள் நலனில் அக்கறை கொள்ளும் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து செயல்படும் கைதேர்ந்த காவேரி மருத்துவமனை மருத்துவக் குழுவிற்கு பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக.

சோழிங்கநல்லூர் மநீம மாவட்டம் ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்காக மாவட்டச் செயலாளர் திரு.பிரவீன் மார்கஸ் அவர்களின் முன்னிலையில், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.மயில்வாகனன் தணிகைவேல் அவர்களின் ஒருங்கிணைப்பில், 16-12-2023 அன்று இம்மருத்துவ முகாம் நடைபெற்றது.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
#CycloneMichaung

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1736778850481401963?t=Y0_hgayha1uPk0YuFcEvag&s=19

Facebook: https://www.facebook.com/share/p/BTZoXBt6j8xArpkp/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C1ABlPGPdLq/?igshid=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post