நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் முன்னிலையில், சென்னை மண்டலத்தின் மாவட்டச் செயலாளர்கள் திரு. உதயகுமார், திரு. சண்முகசுந்தரம், திரு. சைதை ஜே. கதிர், திரு. கோவிந்தராஜ், திரு. அப்துல் முசாஃபர், திரு. சீனிவாசன், திரு. மாறன், திரு. கோமகன், திரு. சக்தி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அனைவரின் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்ட தலைவர் அவர்கள், சென்னை மண்டலத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் கள நிலவரங்களைக் கேட்டறிந்து, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துவது, மக்கள் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்வது மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. ஏ.ஜி. மௌரியா, பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம், தலைமை நிலைய மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1947653747301372076
Facebook: https://www.facebook.com/share/p/1JtceuShjB/
Instagram: https://www.instagram.com/p/DMaYQkjJ2lB/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==