போராடும் CJP தொண்டர்களுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து.

22 July 2026
 

போராடும் CJP தொண்டர்களுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்களின் அறிவுறுத்தலின்படி,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில நிர்வாகிகள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. S.B.அர்ஜுனர், திரு. அரவிந் ராஜ் உள்ளிட்டோர், 

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, சென்னை - தி.நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் போராடிவரும் மாணாக்கர்கள் மற்றும் இளைஞர்களை, நேரில் சந்துத்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஆதரவைத் தெரிவித்ததுடன், 

திரு. செந்தில் ஆறுமுகம் அவர்கள் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக பேராடிவரும் அனைவரையும் பாராட்டி, வாழ்த்துரை வழங்கி உரையாற்றினார்.

இச்சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் திரு. உதயகுமார், திரு. கதிர், திரு. தேசிங்குராஜன், திரு. முசாபர் அலி, மண்டல அமைப்பாளர்கள் திரு. சேகர், திரு. சந்துரு, புதுச்சேரி வழக்கறிஞர் மாணவர் அணி மாநில அமைப்பாளர் திரு. ஜெயச்சந்திரன் ஆகியோருடன் மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் முதலானோர் உடன் சென்றனர். 

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#CJP
#NEET
#NeetProtest

Download PDF


Recent video







Share this post