மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி, மதுரை கற்பகநகரில் உள்ள ஜெயின் சிறப்பு பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்காக இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
மகளிர் அணி மாநில செயலாளர் திருமதி. பத்மா ரவிச்சந்திரன் (மதுரை மற்றும் நெல்லை மண்டலம்) மற்றும் மகளிர் அணி மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி. கலையரசி ஆகியோரின் ஏற்பாட்டில்,
ஜெயின் சிறப்பு பள்ளி நிர்வாகத்தின் தலைவி திருமதி. ஆரியமாலா மற்றும் தாளாளர் திரு. கணேசன் ஆகியோரின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த முகாமில் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனையின் ஒத்துழைப்புடன் 55 பேருக்கு கண் பரிசோதனை செய்து, தேவைப்படுவோருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன, மேலும் ஐந்து நபர்களுக்கு கண் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டு நடைபெற உள்ளது.
நிகழ்வில் வார்டு செயலாளர் திரு. மாதவன், குடியிருப்பாளர் சங்கத் தலைவர் திரு. ஜெயபிரகாஷ், திரு. ஷாஜஹான் நிலாமுற்றம், ஊர்காவல் படையை சார்ந்த திரு. பெத்துராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.
மேலும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சிறப்பு குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் திருமதி. ராஜலக்ஷ்மி, திருமதி. உமாராணி, செல்வி. மெர்லின், செல்வி. ஸ்டெபி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்,
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1931707895571529948
Facebook: https://www.facebook.com/share/p/15hQW2LXhX/
Instagram: https://www.instagram.com/p/DKpFBhxp6td/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==