மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

5 ஜூன், 2025
 
S

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு,

நமது தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனுவை நாளை (06-06-2025 - வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்கிறார் என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

தலைமைச் செயலகத்தில் நாளை நண்பகல் 12 மணி அளவில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

நாளை நமதே! 

A.G. மெளரியா, I.P.S., (ஓய்வு),
துணைத் தலைவர்,
மக்கள் நீதி மய்யம்.


R. தங்கவேலு, 
துணைத் தலைவர்,
மக்கள் நீதி மய்யம்.


ஆ. அருணாச்சலம் M.A., B.L.,
பொதுச்செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.


#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1930642284820955611?s=19

Facebook: https://www.facebook.com/share/p/1AUPQC4Z3r/

Instagram: https://www.instagram.com/p/DKhgew_Jwfv/?igsh=MXgxeDN2dzZyMHZiag==

சமீபத்திய காணொளி







Share this post