மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த மாணவர்கள்!.

24 ஜூன், 2023
 
S

மக்கள் நீதி மய்யத்தில் இணையும் இளைஞர்கள்.

இன்று (24-06-2023) காலை 11 மணியளவில் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு.A.G.மௌரியா IPS(Rtd) அவர்கள், பொது செயலாளர் திரு. ஆ.அருணாசலம் அவர்கள் மற்றும் இளைஞர் அணி மாநில செயலாளர் கவிஞர். திரு.சினேகன் ஆகியோரின் முன்னிலையில் சென்னை கொளத்தூர், சைதாப்பேட்டை, திருவொற்றியூர், ராயப்பேட்டை பகுதிகளை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்.

நிகழ்வில் ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநில செயலாளர் திரு. முரளி அப்பாஸ், கொள்கை வடிவமைப்பு மாநில செயலாளர் திரு. S.B.அர்ஜுனர், மாநில கொள்கை பரப்புரையாளர் திருமதி. அனுஷா ரவி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடு: இளைஞரணி மதுரை மண்டல அமைப்பாளர் திரு.பரணிராஜன், இளைஞரணி மதுரை மாவட்ட அமைப்பாளர் திரு.வினோத் கண்ணன்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1672565749381234693?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02hix5qRwCioPVavaQxYXS3ywdpSevoMnHn4HYoN5m4vx3C3rzVDaBw5kafrbHL28tl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/Ct3pbWgP0qD/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post