மநீம தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், புதுச்சேரி மாநில நிர்வாகிகளைச் சந்தித்து, கள நிலவரங்களை கேட்டறிந்தார்.

19 ஜூலை, 2025

 

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், நேற்று (18-07-2025) ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.

இந்த வருகையின் போது, புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் திரு. G.R.சந்திரமோகன், புறநகர் பொதுச் செயலாளர் திரு. ப.முருகேசன், வழக்கறிஞர் மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. R.C.ஜெயச்சந்திரன் மற்றும் பொறுப்பாளர்களைச் சந்தித்த தலைவர் அவர்கள், அனைவரின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டதுடன், புதுச்சேரி சட்டமன்றத் தொகுதிகளின் கள நிலவரங்களை கேட்டறிந்துகொண்டு, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா, பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1946541713499037791

Facebook: https://www.facebook.com/maiamofficial/posts/pfbid02J7zPewVakfeNPyCB5268xcjN
CiQBLq2CbGVMF9GCH99ssumUWNuHKhHYWyRQtK5Jl


Instagram: https://www.instagram.com/p/DMSek6lJ0Cb/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post