வணக்கம்
இன்று (12.06.2024) காலை 10 மணியளவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திரு. சசிகாந்த் செந்தில் அவர்கள், தலைவர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இருவரும் நிகழ்கால அரசியல் மற்றும் சமூகம் சூழல் பற்றி கலந்துரையாடினர்.
திரு. சசி காந்த் செந்தில் அவர்களுடன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் திரு. A.G.சிதம்பரம், திரு. இனாமுல் ஹசன், திரு. பாபு ஆகியோர் வந்திருந்தனர்.
நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS(Rtd) அவர்களும், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் M.A., B.L அவர்களும் உடனிருந்தனர்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
நம்மவரை சந்தித்த, திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்திரு. சசிகாந்த் செந்தில்.
12 ஜூன், 2024
in அறிக்கைகள்