தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற, நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு அவசரக் கூட்டம்.

6 மார்ச், 2026
 
S

தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற, நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு அவசரக் கூட்டம்.
(06.03.2026)

மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்களின் தலைமையில்,

நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு அவசரக் கூட்டம் கட்சியின் தலைமை நிலையத்தில் நடைபெற்றது.

கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மெளரியா IPS (ஓய்வு) அவர்கள், திரு. R.தங்கவேலு
அவர்கள், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், கட்சியின் பொருளாளர் திரு. சந்திரசேகர் அவர்கள், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முதலானோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில்,

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள், யார் வேட்பாளர்கள், எந்த சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்டவைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

கூட்டத்தின் இறுதியாக கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

-ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


சமீபத்திய காணொளி







Share this post