தரக்குறைவாக பேசிய தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் கண்டனம்.
(20-08-2025)
மதிப்புவாய்ந்த பதவி வகித்தவர்கள் மனம்போன போக்கில் பேசுவதா?
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு கூறிய பதிலைத் திரித்து, தேவையற்ற பிரச்சினையைத் தொடங்கியிருக்கிறார் மதிப்பிற்குரிய முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள்.
ஒருவர் என்ன கூறியுள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், பத்திரிகையாளர் கேள்விக்கு தன் மனம்போன போக்கில் பதில் கூறுவது, அவர் இதுவரை வகித்த பதவிகளுக்கு அழகல்ல. தான் எதையாவது கூறி செய்திகளிலும், அரசியலிலும் தனது இருப்பை நிலைநாட்டிக் கொள்ளவே அவர் முயற்சிக்கிறார் என்பதையே இது வெளிப்படுத்துகிறது. எங்கள் தலைவர் என்ன கூறினார் என்பதை இந்த வீடியோவைப் பார்த்து திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறோம்.
-ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
தரக்குறைவாக பேசிய தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் கண்டனம்.
20 ஆகஸ்ட், 2025
in அறிக்கைகள்