டெல்லியில் நடந்த பாரத் ஜோடோ யாத்ராவில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கலந்துகொண்டோருக்கான பாராட்டுவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் பங்கேற்றோருக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கி உரையாற்றினார்.
விழாவில், டெல்லி யாத்ராவில் பங்கேற்றோரைப் பாராட்டிய தலைவர் கமல்ஹாசன் அவர்கள், அடுத்தடுத்து பெரிய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன என்பதைத் தெரிவித்தார்.
பல்வேறு போராட்டங்கள், உயிர்த் தியாகங்களுக்குப் பிறகு உருவான ‘‘தமிழ்நாடு’’ என்ற பெயரை கேள்விக்குள்ளாக்கும் முயற்சியை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், மதத்தை முன்வைத்து நடத்தப்படும் அரசியலை எப்போதும் நான் எதிர்த்து வந்திருக்கிறேன். மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவது குழந்தைகளைப் போருக்குப் பயன்படுத்துவதற்கு ஒப்பானது என்று இடித்துரைத்தார் தலைவர்.
அன்று, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது குரல்கொடுத்தேன், அன்றைய பிரதமரைச் சந்தித்து நீதிக்காக முறையிட்டேன்.
இன்று இந்தியாவின் மாண்புகள் தாக்குதலுக்கு உள்ளானபோது ‘‘பாரத் ஜோடோ யாத்ராவில்’’ பங்கேற்றேன்.
என்றுமே, நீதிக்காக நமது கருத்து தொடர்ந்து ஒலிக்கும். இதுவே நாம் முன்வைக்கும் மய்யவாதம் என்று தெளிவுபடுத்தினார்.
ஊர்தோறும் கொடிகள் ஏற்றுவோம், ஒவ்வொருவரும் தலைமைப் பண்புகளை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு கட்சியை வலுப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார் தலைவர்.
மேலும், ஜல்லிக்கட்டு பேரவை - தமிழ்நாடு அமைப்பும், நம்மவர் கமல் ஹாசன் அவர்களும் இணைந்து சென்னையில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசிடம் அனுமதி கோர உள்ளதாகவும், இது கிராமியக் கலாச்சாரத்தை நகரத்திற்குக் கொண்டுவந்து சேர்க்கும் முயற்சி என்றும் அறிவித்தார். நிகழ்வின் முடிவில் அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது.
- ஊடகப்பிரிவு,
மய்யம் நீதி மய்யம்.
எங்கள் பெயர் தமிழ்நாடே! மத அரசியலுக்கு எதிர்ப்பு! டெல்லி யாத்திரையில் பங்கேற்றோருக்கான பாராட்டு விழாவில் மநீம தலைவர் கமல்ஹாசன்
6 ஜனவரி, 2023
in அறிக்கைகள்
சமீபத்திய காணொளி
Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.