இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராபர்ட் ப்ரூஸ், நம்மவருடன் சந்திப்பு.

19 ஜூன், 2024

வணக்கம் 

இன்று (18.06.2024) காலை 11:30 மணியளவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, இந்திய தேசிய காங்கிரஸின் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் C.ராபர்ட் ப்ரூஸ் அவர்கள் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு, நம்மவர் தன் பரப்புரை மூலம் உதவிசெய்தமைக்கு நன்றிபாராட்டினார்.

திரு. C.ராபர்ட் ப்ரூஸ் அவர்களுடன் இந்திய தேசிய காங்கிரஸின் நிர்வாகிகள் திரு.ராஜேஷ், திரு.பிரதாப் ஆகியோரும் வருகை தந்தனர்.

நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Rtd) அவர்களும் கலந்து கொண்டார்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF 


சமீபத்திய காணொளி







Share this post